கரூர், செப். 17: கரூர் பைபாஸ் சாலை சுக்காலியூரில் சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூரில் இருந்து என்எச் 67 சாலை சுக்காலியூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 7 உடன் இணைகிறது. திருச்சி- கோவை மார்க்கமாக செல்லும் கனரக வாகனங்கள் சாலையோரம் பார்க்கிங் செய்யப்படுகிறது. லாரிகள் டிரக்குகள் போன்றவற்றை சாலையோரம் நிறுத்துவதால் இந்த இடத்தில் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.