தாந்தோணிமலையில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம், பீதி

கரூர், ஜூலை 24: தாந்தோணிமலையில் அதிகரித்து வரும் தெரு நாய்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை குறிஞ்சி நகர், வெங்கடேஷ்வரா நகர், வடக்குத்தெரு, சவுரிமுடித்தெரு, வஉசி தெரு போன்ற பல்வேறு தெருக்களில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பகுதிகளில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கரூர் நகரப்பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீடு திரும்பும் போது, தெரு நாய்களால் தொல்லை காரணமாக கடுமையாக அவதிப்படுகின்றனர். மேலும், சிறுவர், சிறுமிகளும் இந்த பகுதியில் அதிகளவு உள்ளனர். எனவே, பகுதி முழுதும் சுற்றித்திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்திட நகராட்சி அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: