கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் படர்ந்த செடிகொடிகளால் வீரர்கள் பாதிப்பு

கரூர், ஜூலை 24: கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தின் மையப்பகுதியில் படர்ந்துள்ள புதர்ச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் கலெக்டர் அலுவலகத்தின் பின்புற பகுதியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மைதானத்தின் மையப்பகுதியில் கால்பந்து விளையாடும் மைதானம் உள்ளது.மைதானத்தை சுற்றிலும் கடந்த சில மாதங்களாக அதிகளவு புதர்ச்செடிகள் படர்ந்துள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மைதானத்தில் கால்பந்து பயிற்சி மேற்கொண்டு வரும் வீரர்கள், வீராங்கனைகள் இதனால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.படர்ந்துள்ள இந்த செடிகளை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கால்பந்து மைதானத்தை சுற்றிலும் படர்ந்துள்ள இந்த புதர்ச்செடிகள் காரணமாக பயிற்சிகள் சரிவர மேற்கொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை பார்வையிட்டு படர்ந்துள்ள புதர்ச்செடிகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: