மாதந்தோறும் 1ம் தேதி பென்ஷன் வழங்ககோரி போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூலை 24: போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நலச்சங்க பேரவை கரூர் மண்டலம் சார்பில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கைகளான மாதந்தோறும் 1ம் தேதியே பென்ஷன் வழங்க வேண்டும். பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.அரசு அறிவிக்கும் தேதியில் இருந்தே பஞ்சப்படி வழங்க வேண்டும். இதுவரை வழங்க வேண்டிய 44 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதிய நாளன்றே அனைத்துப் பலன்களையும் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு பலன்களை ஓய்வு பெற்றோருக்கும் அமல்படுத்த வேண்டும், மக்களின் நலனுக்கா செயல்படும் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் பற்றாக்குறையை அரசே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார்.மத்திய சங்க துணை செயலாளர் மணி, நிர்வாகக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மகளிர் அணி நாகலட்சுமி, மண்டல செயலாளர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: