கரூர், மே 23: கோடை விடுமுறையையொட்டி மாயனூர் பூங்காவுக்கு சிறுவர்கள் வருகை அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை அருகே செல்லாண்டியம்மன்கோயில் கரையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்காவில் செடிகள், சிறுவர்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுஉபகரணங்கள், வண்ண மீன்கள்அருங்காட்சியகம், உடற்பயிற்சிக்கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.