தென்னிலை துவக்க பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா

க.பரமத்தி, மார்ச் 19: தென்னிலை தொடக்க பள்ளியில் பெற்றோர், முன்னாள் மாணவர்களால் கல்வி சீர்வரிசை வழங்கும் விழா நடைபெற்றது. க.பரமத்தி ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கும், பெற்றோருக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்த கல்வி சீர் வழங்கும் விழா தென்னிலை தொடக்க பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முன்னாள் மற்றும் தற்போதைய மாணவ, மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சீர் வரிசை பொருள்களுடன் தென்னிலை கடைவீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பள்ளியை வந்தடைந்தனர். இதற்கான விழாவுக்கு வந்தவர்களை தலைமை ஆசிரியர் பானுமதி வரவேற்றார். வேறு பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன், பால்வார்பட்டி சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்து பேசினார். விழாவில் பள்ளிக்கு அடிப்படை தேவையான தண்ணீர் சேமிக்கும் பாத்திரம், பென்சில், நோட்டு, விளையாட்டு உபகரணங்கள், ஆகியவற்றை பள்ளி முன்னாள் மற்றும் தற்போதைய மாணவ, மாணவிகளின் பெற்றோர், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் சீர்வரிசையாக பள்ளிக்கு வழங்கினர். விழாவில் ஆசிரியர்கள், மற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் பள்ளி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

Related Stories: