கடவூர் ஒன்றியத்தில் அரசியல் கட்சி விளம்பரம் அழிக்கும் பணி தீவிரம்

கடவூர், மார்ச் 15: கடவூர் ஒன்றியத்தில் அரசியல் கட்சியினர் எழுதியிருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் 2ம் கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 இதனால் ஆங்காங்கே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடவூர் ஒன்றியத்தில் தாலுகா அலுவலகம் அருகில் பாலத்தில் கட்சி விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தது. இதனை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் அழிக்கப்பட்டது.

மேலும் பல இடங்களில் கட்சி விளம்பரங்கள் அதிகமாக உள்ளன. மேலும் பொது இடங்களில் கொடி கம்பங்கள் கழற்றப்படாமல் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகிறது. கடவூர் ஒன்றியத்தில் அலுவலர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற முன் வராமல் உள்ளனர். எனவே விளம்பரங்கள் மற்றும் கொடி கம்பங்களை அகற்ற சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: