கடவூர், மார்ச் 15: கடவூர் ஒன்றியத்தில் அரசியல் கட்சியினர் எழுதியிருந்த விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. தமிழகத்தில் 2ம் கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஆங்காங்கே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடவூர் ஒன்றியத்தில் தாலுகா அலுவலகம் அருகில் பாலத்தில் கட்சி விளம்பரங்கள் எழுதப்பட்டிருந்தது. இதனை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மூலம் அழிக்கப்பட்டது.