கரூர், மார்ச் 15: கரூர் அரசு கலைக் கல்லூரியில் இளையோர் செஞ்சிலுவை சங்க்தின் சார்பில், மனநலம், உடல்நலம் எனும் தலைப்பில் மாணவ மாணவியருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பிரீத்தா பெண்களுக்கான உடல்நலம், மனநலம் குறித்து பேசினார். டாக்டர் சீனிவாசன் தோல், நகம், முடி பராமரிப்பு பற்றி பேசினார். கல்லூரி முதல்வர்(பொ) ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட ரெட்கிராஸ் செயலாளர் வில்லியம்ஸ், துணைத் தலைவர் ராஜேந்திரன், தமிழ்த்துறை தலைவர் மாரியம்மாள் ஆகியோர் பேசினர். இளையோர் செஞ்சிலுவை சங்க கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணசிங் வரவேற்றார். வரலாற்றுத்துறை பேராசிரியர் செல்வகுமார்நன்றி கூறினார்.