கரூர் காதம்பாறையிலிருந்து வெண்ணெய்மலை வரை ஜல்லி கற்கள் கொட்டியதோடு பாதியில் நிற்கும் சாலை பணி

கரூர், மார்ச். 15: கரூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் சாலை அமைப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை அவசர அவசரமாக போடப்பட்டுள்ளது. இதே போல், கரூர் காதப்பாறை பகுதியில் இருந்து வெண்ணைமலை செல்லும் சாலையிலும் தார்ச்சாலை போடும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டு, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளது.

 சாலை பணிகள் தொடர்ந்து நடைபெறாத காரணத்தினால் மற்ற வாகனங்கள் அனைத்தும் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக இந்த பணி துவங்கப்பட்டிருந்ததால் தொய்வின்றி தார்ச்சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர், வாங்கப்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் இந்த சாலையினை பயன்படுத்தி வருவதால், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

Related Stories: