கரூர்,பிப்.13: கரூர் நகராட்சிக்குட்பட்ட தில்லை நகர் குடியிருப்பு பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் அடுத்துள்ள தில்லை நகர பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாக்கடை வடிகால் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்கான தெரு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், பணிகள் முடிவடைந்து அரைகுறையாக பள்ளத்தை மூடி விட்டு செல்லப்பட்டு விட்டது.