தில்லை நகர் பகுதியில் குண்டும், குழியுமான மண் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

கரூர்,பிப்.13: கரூர் நகராட்சிக்குட்பட்ட தில்லை நகர் குடியிருப்பு பகுதிகளில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர் அடுத்துள்ள தில்லை நகர பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சாக்கடை வடிகால் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த பணிகளுக்கான தெரு சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன. ஆனால், பணிகள் முடிவடைந்து அரைகுறையாக பள்ளத்தை மூடி விட்டு செல்லப்பட்டு விட்டது.

இதனால், தில்லை நகர் துவக்கம் முதல் பிரதான சாலை வரை தெருச்சாலை மேடும் பள்ளமுமாக நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமத்துடன் சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை நிலவி வருகிறது. எனவே, இந்த தில்லை நகர்ச்சாலையை திரும்பவும் சீரமைத்து, சீரான போக்குவரத்து நடைபெறும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: