கரூர்,டிச.11: அறிவியல் கண்காட்சியில் வெள்ளியணை அரசு பள்ளி இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது. கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் வெள்ளியணை அரசுப்பள்ளி மாணவர் மனோஜ் 2ம் இடம் பரிசாக வெள்ளிப்பதக்கம் சான்றிதழ் பெற்றார். மாணவனுக்கு பள்ளியில் பாராட்டுவிழா நடைபெற்றது. தலைமையாசிரியர் தமிழரசன் தலைமை வகித்தார். கட்டடக்குழு தலைவர் ராமநாதன் முன்னிலை வகித்தார். கேபால்சாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கண்காட்சியில் பங்கேற்ற ஹரிபாலா, பெரியசாமி, பொன்னுசாமி, சுகி, ஜெகன், மனோஜ் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.