இரட்டை வாய்க்கால் பாலத்தில் விரிசல் சீரமைக்க கோரிக்கை

கரூர், நவ.8: கரூர் ரத்தினம் சாலையில் இருந்து நீலிமேடு பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலம் உடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை

விடுக்கப்பட்டுள்ளது.கரூர் நகராட்சிக்குட்பட்ட ரத்தினம் சாலையில் இரட்டை வாய்க்கால் செல்கிறது. இப்பகுதியில் இருந்து நீலிமேடு மற்றும் கேஎம்சி காலனி ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான குறுகிய பாலம் இரட்டை வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்தின் மீது தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும், நூற்றுக்கணக்கான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகின்றனர்.பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது, விரிசல் அடைந்தும், பழுதடைந்த நிலையிலும் உள்ளது. இதனால், இந்த பாலத்தின் வழியாக இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.மேலும், பாலத்தின் நிலை குறித்தும் பகுதி மக்கள் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். எனவே, பாலத்தின் தற்போதைய நிலையை கவனத்தில் கொண்டு, புனரமைக்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: