கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடிய 8 பேர் கைது

தோகைமலை, நவ.8:கரூர் மாவட்டம் தோகைமலை காவல் சரகத்தில் உள்ள கள்ளை மாணிக்கம் என்பவரின் தோட்டத்தில் அரசு அனுமதியின்றி சேவல் சண்டை போட்டி நடத்தி சூதாட்டம் நடப்பதாக போலீ

சாருக்கு தகவல் வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அப்பகுதியை ஆய்வு செய்து சேவல் சண்டையில் ஈடுபட்ட கள்ளையை சேர்ந்த பழனிச்சாமி (29), நங்கவரம் சவாரிமேட்டை சேர்ந்த தமிழழகன் (37), வடக்கு மாடுவிழுந்தான்பாறையை சேர்ந்த பாலசுப்பிரமணயன் (39), சரவணன் (30), கள்ளளை பூவாயிபட்டியை சேர்ந்த முருககணேசன் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பைக்குகள், 3 சேவல்கள், ரூ.2,720 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.இதேபோல், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த வேட்டமங்கலம் காட்டுப்பகுதியில் சேவலை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்த வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்றுமுன் தினம் மாலை சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது சேவலை வைத்து சூதாட்டம் நடத்திய 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் அங்கிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: