கரூர், நவ. 2: கரூர் பகுதி கிராமங்களில் காகித ஆலை நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில் ஒனவாக்கால்மேடு, நல்லியாம்பாளையம், சொட்டையூர், மூலிமங்கலம், பழமாபுரம், மசக்கவுண்டன்புதூர், குறுக்குப்பாளையம் ஆகிய கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் காகித ஆலை மருத்துவர்கள் குழுவினர் கலந்து கொண்டு 172 பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர். மருந்துகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. வாங்கல் குப்பிச்சிபாளையத்தில் புதிய துணை மின் நிலையம் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.