கொசு ஒழிப்பு பணி

கரூர்,அக்.12.  கள்ளபள்ளி ஊராட்சிபகுதியில் கொசுஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குளித்தலை வருவாய்க்கோட்டாட்சியர் லியாகத் இப்பணிகளை ஆய்வு செய்தார். வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றவேண்டும். தண்ணீர் சேமிப்பு பாத்திரங்களை சுத்தமாகவும், மூடிவைத்தும்பயன்படுத்த வேண்டும், என பொதுமக்களிடம் அலுவலர்கள் தெரிவித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், சுகாதார ஆய்வாளர் சிவானந்தம், கிராமநிர்வாக அலுவலர் லிங்கேசுவரன், ஊராட்சிசெயலர் லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: