கரூர், அக். 11: கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் கல்வி இயக்கமும், மாற்றுத்திறானிகள் நல அலுவலகமும் இணைந்து சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்திய சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு கூறியதாவது:
மற்றவர்களை போல மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் சம அளவில் நடத்திட வேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில், எலும்பு மருத்துவர், காது, மூக்கு? தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், பொதுமருத்துவர், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர்களை கொண்டு முகாம் நடத்தப்பட்டது. இதில், 202 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.