கரூரில் 8 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர், அக். 11: கரூரில் தமிழ்நாடு ஒய்வுபெற்ற அனைத்து ஆசிரியர்கள் சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காத்தமுத்து வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பிச்சுமணி, அனைத்து துறை ஓய்வூதியர் சங்க தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். மாவட்ட பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார். ஊதிய உயர்வு நிலுவைகளை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2006க்கு முன்பு ஒய்வு பெற்றவர்களுக்கும் கிரேடு பே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Related Stories: