மேட்டுப்பாளையம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

 

மேட்டுப்பாளையம், நவ.25: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி வாக்காளர் பட்டியல் திருத்தம் 2024 பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி, ரோசரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் சங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, வாக்குச்சாவடி மைய அலுவலர்களிடம் பணிகள் மேற்கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில் வடிவு, வட்டாட்சியர் சந்திரன், நகராட்சி கமிஷனர் அமுதா, தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பாலமுருகன், நகராட்சி அலுவலர்கள் ஆரிப் உல்லா, ஜெயராமன், பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி, சகோதரி குழந்தை தெரேசா, வாக்குச்சாவடி நிலை அலுவலர் அமராவதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

The post மேட்டுப்பாளையம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.