போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது

 

கோவை, ஜன.20: கோவை ஆர்.எஸ்.புரம் சிந்தாமணி அருகே போக்குவரத்து காவலர் ஆனந்தன் (30) நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஒரு பைக்கில் சென்ற 3 பேரை காவலர் ஆனந்தன் தடுத்து நிறுத்தினார். உடனே அவர்கள் தாங்கள் வந்த பைக்கில் தப்பிச்சென்றனர். உடனே காவலர் ஆனந்தன் தனது பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது அந்த 3 பேரும் ஒரு ஆட்டோ டிரைவரிடம் தகராறு செய்துகொண்டிருந்தனர்.

அவர்களை காவலர் ஆனந்தன் மடக்கிப்பிடிக்க முயன்ற போது அந்த 3 பேரும் காவலர் ஆனந்தனின் சட்டையை பிடித்து தாக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆனந்தன் அந்த 3 பேரையும் மடக்கிப்பிடித்து ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார். விசாரணையில், பிடிபட்டவர்கள் ஹபீப் (23), அப்துல் (25) செல்வபுரம், அலாவுதீன் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் மீது ஏதேனும் வழக்குகள் இருக்கிறதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீசாரை தாக்க முயன்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.