போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

 

கோவை, ஜன 14: 100 சதவீதம் போதை பொருட்களை தடுக்கும் விதமாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருட்கள் பழக்கத்தை தடுக்கும் விதமாக இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது. இதில் 16 வயது முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டனர். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் அவரும் சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார். நிகழ்ச்சியில், சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால், செட்டி வீதி, பேரூர், பச்சாபாளையம், ஆலாந்துறை, மாதம்பட்டி, சாடிவயல், ஈஷா யோகா சென்று அடைந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

The post போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு சைக்கிள் பேரணி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.