பைக் திருடிய வாலிபர் கைது

 

அன்னூர், ஜூன் 7: தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி பகத் (30). இவர், அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள பழைய தபால் அலுவலகம் அருகே வாடகைக்கு அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த முகமது அலி பகத், தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றார். அதிகாலையில் வந்து பார்த்த போது பைக் திருடு போயிருந்தது.

இது குறித்து அவர் அன்னூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வந்த நிலையில் நேற்று கோவை சாலையில் எஸ்ஐ விக்னேஷ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்ததில் கோவை தடாகம் பகுதியை அடுத்துள்ள கணுவாய் காமராஜ் நகர் பகுதியைச்சேர்ந்த அப்துல் மஜ்கர் மகன் அப்துல் ரகுமான் (21) என்பதும், முகமது அலி பகத்தின் பைக்கை திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

The post பைக் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.