காலாப்பட்டு : சென்னையில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் 60 பேர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்னகோட்டக்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். ஓட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் அவர்கள் நேற்றுமுன்தினம் குளித்தபோது சென்னை ஆவடியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் தினேஷ்குமார்(26), என்ற மாணவர் நீச்சல் தெரியாமல் தத்தளித்தார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.