பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி

அன்னூர்,மார்ச்27: பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம், அன்னூர் அடுத்துள்ள பொகலூர் பேருந்து நிலையம் அருகே கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் ரத்னசபாபதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி வெள்ளியங்கிரி கலந்து கொண்டு கூட்டமைப்பின் கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் பொகலூர் வீரமாத்தி அம்மன் திருக்கோவில் வளாகத்தில் கூட்டமைப்பின் சார்பில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்று தர இந்த கூட்டமைப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற டிஎஸ்பி வெள்ளியங்கிரி பேசினார். இந்நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் செயலாளர் திருஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் கணேசபுரம், அன்னூர், பொகலூர் ஆகிய மூன்று இடங்களிலும் நடைபெற்றது….

The post பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் பொகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.