பாரதியார் பல்கலை. பிஎச்டி மாணவர் சேர்க்கை

 

கோவை, ஜூன் 12: கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்டி, பட்ட படிப்பிற்கான சேர்க்கை விண்ணப்பங்கள் இணைய தளம் (www.b-u.ac.in) வாயிலாக 12.06.2024 முதல் 30.06.2024 தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பக்கட்டணமாக ரூ.1000 பிஎச்.டி ஆராய்ச்சி படிப்பிற்கும் (எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு ரூ.500, பிஎச்டி ஆராய்ச்சி படிப்பிற்கு சாதி சான்றிதழ்களுடன்) இணைய வழி வாயிலாக செலுத்தலாம். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் பதிவாளர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்- 641046 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.06.2024 (மாலை 5 மணி வரை). கடைசி தேதிக்குப் பிறகு வரும் விண்ணப்பங்களும், உரிய கட்டணமின்றி பெறப்படும் விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஜூலை 2024 பிஎச்.டி (பகுதி/முழு நேரம் ஆராய்ச்சிப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கையானது ஜூன் 2024 பொது நுழைவுத் தேர்வு அடிப்படையிலும், நேர்காணல் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் நடைபெறும். மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய பல்கலைக்கழக இணையதளத்தை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாரதியார் பல்கலை. பிஎச்டி மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.