படைவீரர் குறைதீர் கூட்டம்

 

சிவகங்கை, ஜூலை 6: சிவகங்கையில் முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சிறப்பு குறைதீர் கூட்டம் ஜூலை 11ல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூடத்தில் ஜூலை 11 பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர், சார்ந்தோர் அன்றைய தினம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வருகை புரிந்து, தங்களது குறைகளை இரட்டை பிரதிகளாக வழங்கி பயனடையலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post படைவீரர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: