நீட் பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு

கோவை, ஏப்.30: நாடு முழுவதும் நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடக்கிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நேரடியாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 371 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய மூன்று மையங்களில் நடந்து வருகிறது.

இதில், துணி வணிகர் சங்கப்பள்ளியில் 103 மாணவர்கள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சியில் தலா 54 மாணவர்கள் என மொத்தம் 211 மாணவ, மாணவிகள் நீட் பயிற்சியை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு நீட் பயிற்சியானது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 மணி முதல் மாலை 4.30 மணி வரை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் மே 2ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நேற்று நடத்தப்பட்டன. இந்த தேர்வினை நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர். மேலும், சில மாணவர்கள் நேற்று மாதிரி தேர்வுகளை எழுதவில்லை. இந்த விடுப்பட்ட மாணவர்களுக்கு இன்று மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீட் பயிற்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.