தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

 

கோவை, செப். 15: ஜி 20 மாநாட்டை முன்னிட்டி ஆர்.பி.ஐ சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கோவை காந்தி மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான ராம்பிரியா மற்றும் ஆகாஷ் கலந்துகொண்டனர். இதில் வட்டம், மாவட்டம், மாநிலம், தென்மாநில அளவிளான போட்டியில் முதல் பரிசை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தேசிய அளவிலா போட்டி மும்பையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, மத்யபிரதேஷ், பிஹார், அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 12 பேர் கலந்துகொண்டனர். வீடியோ மற்றும் ஆடியோ, பசர், நெகடிவ் பசர், ஸ்பீட் ஆகிய சுற்றுகளில் தமிழகம் சார்பாக கலந்துகொண்ட மாணவர்களான ராம்பிரியா மற்றும் ஆகாஷ் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

The post தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.