துப்பாக்கி சுடும் போட்டியில் நாமக்கல் மாணவி சாதனை

நாமக்கல் : சென்னை ஆவடி அருகேயுள்ள வீராபுரத்தில், மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. அதில் நாமக்கல் சூட்டிங் அகாடமியை சேர்ந்த பயிற்சியாளர் ராகவி கலந்து கொண்டு, 25 மீட்டர் 22 ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் சீனியர் பிரிவு தனித்திறன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இவருக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்தார். ராகவி தொடர்ந்து 3வது முறையாக தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவருடைய தங்கை ரசிகாவும் இப்போட்டிகளில் பங்கேற்று, அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நாமக்கல் சூட்டிங் அகாடமி தலைவர் கேப்டன் பாண்டியன், தேவராஜ், மனோஜ் ஆகியோர் சென்டர் பையர் பிஸ்டர் குழு போட்டிப் பிரிவில் தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.இவர்களை நாமக்கல் சூட்டிங் அகாடமி சங்க பொறுப்பாளர்கள் பாராட்டினர்….

The post துப்பாக்கி சுடும் போட்டியில் நாமக்கல் மாணவி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: