திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் தற்காலிக நிறுத்தம்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சுவாமி சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வருகிற 12ம்தேதி சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 12ம் தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 12ம்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13ம் தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது….

The post திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் தற்காலிக நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: