எனவே அதனை திரும்பப்பெற நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் பி.வி.ராஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், ‘மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை கெஜ்ரிவால் தரப்பு திரும்பப்பெற அனுமதி வழங்கப்படுகிறது. இறுதி தீர்ப்புக்கு எதிராக புதிய மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டு, முன்னதாக தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மனு: புதிய மனு தாக்கல் செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி.! அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு appeared first on Dinakaran.