திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: காங்கிரஸ் பூத்கமிட்டி கூட்டத்தில் முடிவு

 

பெ.நா.பாளையம், மார்ச் 15: கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி பூத் கமிட்டி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்பசாமி தலைமை தாங்கினார். வட்டார காங்கிரஸ் தலைவர் மோகன்ராஜ் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி சர்கிள் தலைவர்கள் சுரேந்திரபாபு, நாகராஜ், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் சூரிய பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மேலிடப் பார்வையாளர் ஈரோடு மாநகராட்சி உறுப்பினர் ரவி மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசியதவாது, ‘தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ராகுல் காந்தி போட்டியிடுவதாக நினைத்து திமுக கூட்டணி வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்’ என்று கூறினர்.

இதில் எச்எம்எஸ் சங்க தலைவர் ராஜாமணி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், சாந்தகுமார், வேலுமணி, மோகன் ராஜேந்திரன், பாலாஜி மருதகிரி, சிங்காரவேலன், ராமராஜ், நாகராஜ், செந்தில்குமார், பொன்ராஜ்தம்பி, பார்த்திபன், சூர்யா வெள்ளிங்கிரி, அசோகன், கணேசன், செல்வராஜ், பாலசுப்ரமணியம், வளர்மதி, பரமேஷ்வரன்,கோவிந்தராஜ் முத்துக்குமார், ஆறுமுகம்,கிருஷ்ணசாமி, பிரபாகரன், வடிவேல், மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: காங்கிரஸ் பூத்கமிட்டி கூட்டத்தில் முடிவு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.