சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கிய முதலைக்காக வலை விரித்து காத்திருக்கும் வனத்துறையினர்

 

மேட்டுப்பாளையம்,டிச.3: மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை சென்னம்பாளையம் பகுதியில் சுரேஷ்(46) என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது,கிணற்றின் அருகே இருந்த மோட்டாரை இயக்க முற்பட்ட போது கிணற்றில் சுமார் 7 அடி நீளத்திற்கு முதலை ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்துள்ளார்.

விரைந்து வந்த சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் முதலையை பிடிக்க முற்பட்ட போது அவர்களிடம் இருந்து தப்பிய முதலை அருகில் உள்ள குட்டையில் சென்று தப்பியுள்ளது. இதனையடுத்து அந்த குட்டையை சுற்றிலும் வலைகளை கட்டி சிறுமுகை வனத்துறையினர் காத்துள்ளனர். குட்டையில் முதலை இருப்பதால் அப்பகுதி மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.தொடர்ந்து 2 வது நாளாக முதலையை பிடிக்கும் பணியில் வலை விரித்து வனத்துறையினர் காத்துள்ளனர். இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமார் கூறுகையில்:

சமீபத்தில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் தப்பிய முதலை கிணற்றிற்குள் வந்திருக்கலாம்.அதை பிடிக்க முற்பட்ட போது கிணற்றின் அருகே இருந்த குட்டையில் சென்று தப்பியது. குட்டையை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்துள்ள நிலையில் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகம் முட்பதர்களை சீரமைத்து கொடுத்தால் முதலையை பிடிக்க ஏதுவாக இருக்கும். தற்போது அந்த குட்டையை சுற்றிலும் வலை அமைக்கப்பட்டுள்ளது. வலையில் முதலை சிக்கினால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் முதலையை பத்திரமாக பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

The post சிறுமுகை அருகே குட்டையில் பதுங்கிய முதலைக்காக வலை விரித்து காத்திருக்கும் வனத்துறையினர் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.