கோவில்பட்டி, ஜன. 6: ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வு இன்றும் (6ம் தேதி), நாளையும் (7ம் தேதி) கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி மற்றும் கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 2 இடங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு மாற்றப்பட்டுள்ளது. காலை 9 மணிக்குள் வரும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் குறித்த நேரத்தில் பயண தூரத்தை கணக்கிட்டு வரும்படியும் தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டியில் சிறப்பு பேருந்துகள் மற்றும் வழக்கமான பேருந்துகள் உள்ளதை பயன்படுத்திக் கொள்ளும்படியும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுகள் மைய கோவில்பட்டி ஒருங்கிணைப்பாளரும், தாசில்தாருமான லெனின் தெரிவித்துள்ளார்.
The post கோவில்பட்டியில் இன்றும், நாளையும் நடக்கிறது ஒருங்கிணைந்த பொறியாளர் பணி தேர்வு appeared first on Dinakaran.