காளப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், நிழற்குடை

 

தொண்டாமுத்தூர், ஜூன் 12: கோவை அருகே சோமையம்பாளையம் ஊராட்சி காளப்ப நாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவை எம்பி நடராஜன் ஆய்வு செய்தார். ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தில் அரசு ஆரம்ப சுகாதாரத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் ரூ.2 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் நிழற்குடை குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து, கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் ரூ.16 லட்சத்தில் ரேஷன் கடை கட்டிடம் கட்டுவது குறித்து ஆய்வு செய்தார்.

முன்னதாக அவருக்கு சோமையம்பாளையம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் இரா.ஆனந்தகுமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக நிர்வாகிகள் மாணிக்கம், அசோக், அருள், அஜித், பாலசந்திரன், சீனிவாசன், சிவசாமி, குமணன், பாண்டி, லட்சுமணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் துரை, மணி, சுகாதார ஆய்வாளர் பாலு, செவிலியர் கீதா மற்றும் பலர் வரவேற்றனர்.

The post காளப்பநாயக்கன்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர், நிழற்குடை appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.