அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம்

 

கோவை: கோவை கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலையத்தில் அஞ்சல் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவசண்முகம் வரவேற்றார். இதில், ஜீவா, சங்கதலைவர்கள் ஜெயபிரகாஷ், செந்தில்குமார், சிவராஜ், முப்பதிமுகமது, கோகுல் கிருஷ்ணன், பாலமுருகன், லியோமைக்கேல் ஆகியோர் தலைமை வகித்தனர்.

சங்க அங்கீகாரம் ரத்தை கண்டித்தும், புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்தும், தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்ய வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வெங்கடாசலம், வசந்த் குமார், பாஸ்கரன், வெங்கடேஷ், அமுதன், ரங்கசாமி, சிவா, ராமசாமி, சாந்தி, கீதப் பிரியா, கவிதா, கோட்ட பொருளாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அஞ்சல் ஊழியர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: