ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக வழக்கறிஞர் அணி கோவையில் ஆர்ப்பாட்டம்

 

கோவை, ஜூலை 6: ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோவை நீதிமன்றம் முன்பு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அன்புசெழியன் தலைமை தாங்கினார். திமுக சட்டத்துறை இணை செயலாளர் கே.எம்.தண்டபாணி, வடக்கு மாவட்ட அமைப்பாளர் பழனிசாமி, தெற்கு மாவட்ட அமைப்பாளர் மருதராஜ்,

தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், காங்கிரஸ் கட்சி வழக்கறிஞர்கள் ஜெயபிரகாஷ், செந்தில்குமார், ஜெரோம் ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்றிய அரசை கண்டித்தும், ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை ரத்துசெய்யக்கோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மூத்த வழக்கறிஞர்கள் கனகராஜ், ரவிச்சந்திரன், ராஜேந்திரன், மருது பாண்டியன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

The post ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி திமுக வழக்கறிஞர் அணி கோவையில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: