அசோகபுரம் ஊராட்சி 17 லட்சத்தில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம்

 

பெ.நா.பாளையம், செப்.23: கோவை அசோகபுரம் ஊராட்சி 2வது வார்டு காந்தி காலனியில் புதிய கீழ் நிலை நீர் தேக்க தொட்டிகட்டும் பணியை ஊராட்சி தலைவர் ரமேஷ் தொடங்கி வைத்தார்.தற்போது முதல் வார்டில் உள்ள கீழ்நிலை தொட்டியில் இருந்து காந்தி காலனி, வெங்கட்டம்மாள் காலனி. சுபிட்சா கார்டன், சிறுகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள குடியிறுப்பு பகுதிகளுக்கு அத்தி கடவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

ஆதி திராவிடர் நலநிதி ரூபாய் 17 லட்சத்தில் கட்டபடும் இந்த புதிய நீர் தேக்க தொட்டி மூலம் நேரடியாக அத்திக்கடவு குடிநீர் சேமிக்கப்பட்டு குடியிறுப்புகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. ஒன்றிய கவுன்சிலர் கலாசாந்தாராம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி செந்தில் ராஜா, வார்டு உறுப்பினர் முருகம்மாள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

The post அசோகபுரம் ஊராட்சி 17 லட்சத்தில் புதிய நீர்தேக்க தொட்டி கட்டும் பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.