தஞ்சாவூர், ஏப்.22: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், திருவையாறு மற்றும் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிகை நடைபெறவுள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை மற்றும் பாதுகாப்பு பணிகள் முன்னேற்றம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
