எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதர் விஜயகாந்த்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல்

புதுச்சேரி: எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதராக விஜயகாந்தை உலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளது என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புகழாரம் சூட்டியுள்ளார். நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சினிமா, அரசியல் என ஒரு தனி மனிதராக விஜயகாந்த் சாதித்தவை, உழைப்பை ஊன்றுகோலாக கொண்டோருக்கு முன்னுதாரணம். விஜயகாந்தின் மறைவு திரைத்துறையிலும் அரசியல் களத்திலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று அவர் கூறியுள்ளார்.

 

The post எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும் மனிதர் விஜயகாந்த்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: