வேளாங்கண்ணியில் 75 கிலோ போதை பொருள் பறிமுதல்..!!

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 75 கிலோ ஹசிஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் விடுதியில் தங்கி இருந்த மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வேளாங்கண்ணியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஹசிஸ் போதை பொருளை க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேளாங்கண்ணியில் 75 கிலோ போதை பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: