இதன்காரணமாக பக்தர்கள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மலைக்கோயிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு கடந்த 11ம் தேதி முதல் வருகின்ற 16ம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் படிக்கட்டு வழியாக மலைக்கோயிலுக்கு பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மலைப்பாதை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதால் சில பகுதிகளில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்ள்ள நலன்கருதி மலைப்பாதையில் நடந்து செல்வதற்கு இன்று 14 முதல் வருகிற 20ம் தேதி வரை பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post இன்றுமுதல் வரும் 20ம்தேதி வரை திருத்தணி முருகன் கோயிலுக்கு படியில்தான் செல்ல வேண்டும் appeared first on Dinakaran.