அரசாங்கத்திடம் அரசியல் அதிகாரம் இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளும் மக்களின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கடந்த முறை இருந்ததை விட இந்திய மக்களின் குரலை இம்முறை எதிர்க்கட்சிகள் அதிகமாகவே பிரதிபலிக்கின்றன. உங்களின் பணியை எளிமையாக்க எதிர்க்கட்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்கும். அதற்கேற்ப இந்த அவை சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.
அதை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஏற்கனவே கூறியது போல ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரின் கருத்தையும் கேட்ட பிறகே ஒருமித்த கருத்துக்கு வரமுடியும். எந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி மட்டுமே முடிவு செய்ய முடியாது. 2024-க்கு பிறகு உருவாகி உள்ள நாடாளுமன்றம் வேறு என்பதை ஆளுங்கட்சி உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கோகோய் கூறியுள்ளார்.
The post ஆளுங்கட்சிதான் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கருத்து appeared first on Dinakaran.