இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களை தொடர்பு கொண்டு குப்பை அதிக அளவு உள்ளது என்று கூறினால், அப்போது மட்டும் குப்பையை அகற்றி விடுகின்றனர். மீண்டும் மறுநாள் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை அந்த இடத்தில் கொட்டப்பட்டு அவற்றை அகற்ற மீண்டும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் எப்போதும் குப்பை அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட அந்த இடத்தை சுத்தம் செய்து வெளிப்பகுதியில் இருந்து எடுத்து வரப்படும் குப்பையை அங்கு கொட்டாமல் நேரடியாக கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
The post தண்டையார்பேட்டை மண்டலம் முத்தமிழ் நகரில் குப்பை குவியலால் கொசு உற்பத்தி: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.