தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது. 3-ம் தேதி தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: