இந்த மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கு வேலம்மாள் கல்வி குழுமத்தின் இயக்குனர் எம்.வி.எம்.சசிகுமார் தலைமை தாங்கினார். கல்வியியல் இயக்குனர் கீதாஞ்சலி சசிகுமார் முன்னிலை வகித்தார். இந்த மாபெரும் யோகாசன நிகழ்ச்சியில் 16 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 21 விதமான யோகாசனங்களை மிக நேர்த்தியாக செவ்வனே செய்து வேலம்மாள் பள்ளிக்கு பெருமையை சேர்த்தனர். இந்த யோகாசன நிகழ்ச்சி ஆசிய மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பஞ்செட்டி, வேலம்மாள் போதி வளாகத்தில் 16 ஆயிரம் மாணவர்கள் 21 வகை யோகாசனங்கள் appeared first on Dinakaran.