சென்னை: சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
சனாதனம் என்பதும்
சனாதன எதிர்ப்பு என்பதும்
காலங்காலமான கருத்துருவங்கள்
பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு
என்பது சனாதனக் கருத்து
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது சனாதன எதிர்ப்பு
திருக்குறளைத்தான்
உதயநிதி பேசியிருக்கிறார்
திருவள்ளுவரைக்
கொண்டாடுகிறவர்கள்
திருக்குறள் பேசிய
உதயநிதியை மட்டும்
எதிர்ப்பது ஏன்?
அரசியல்
என்று பதிவிட்டுள்ளார்.
The post சனாதனம் என்பதும் சனாதன எதிர்ப்பு என்பதும் காலங்காலமான கருத்துருவங்கள்: கவிஞர் வைரமுத்து ட்வீட் appeared first on Dinakaran.