பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 23 வரை அவகாசம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

சென்னை: பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 23 வரை அவகாசம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 துணை தேர்வுக்கு மே 11 முதல் மே 17 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. சிறப்பு அனுமதி திட்டத்தில் இன்று முதல் மே 20 வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர் நலன் கருதி பிளஸ் 2 துணை தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 23 வரை விண்ணப்பிக்க தவறும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தில் மே 24 முதல் மே 26 வரை விண்ணப்பிக்கலாம்.

The post பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 23 வரை அவகாசம்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் appeared first on Dinakaran.

Related Stories: