இதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான், 6.4 ஓவரிலேயே 338 ரன் என்ற இலக்கை எட்டினால் மட்டுமே ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற கனவிலும் சாதியமில்லாத ஒரு சவாலை சந்தித்தது. அந்த அணி 6.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன் மட்டுமே எடுத்ததால், முதல் அரையிறுதியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவும் 4வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியும் மோதுவது உறுதியானது. பரபரப்பான இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நவ. 15ல் நடைபெற உள்ளது. நவ.16ல் கொல்கத்தாவில் நடக்க உள்ள 2வது அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா மோத உள்ளன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நவ. 19ல் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும்.
The post மும்பையில் முதல் அரையிறுதி இந்தியா – நியூசிலாந்து பலப்பரீட்சை appeared first on Dinakaran.