மோடி உலகின் நம்பர் 1 தலைவர்: அமித்ஷா புகழாரம்

புதுடெல்லி: ஜி 20 உச்சி மாநாட்டைத் தொடர்ந்து உலகளவில் அதிக அங்கீகாரம் பெற்ற தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதாக வாராந்திர ஒப்புதல் மதிப்பீடுகளை வெளியிடும் மார்னிங் கன்சல்ட்டின் சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதில் 76 சதவீத மக்கள் மோடியின் தலைமையை ஆமோதித்ததாகவும், 18 சதவீதம் பேர் ஏற்கவில்லை என்றும் கூறியுள்ளது. அவர் தொடர்ந்து கருத்துக்கணிப்பில் முதலிடம் வகிக்கிறார், அவருடைய ஒப்புதல் மதிப்பீடு பெரும்பாலும் 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. 2வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் அதிபர் அலைன் பெர்செட் 64 சதவீதம் பேர் அவரது தலைமைத்துவத்தையும், 26 சதவீதம் பேர் எதிர்ப்பையும் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். ஆனால் சர்வே அடிப்படையில் பிரதமர் மோடி நம்பர் 1 உலக தலைவராக உள்ளார். இந்த சர்வேயை மேற்கோள் காட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். அதில்,’இது வெளியுறவுக் கொள்கையில் மோடி கோட்பாட்டின் வெற்றிக்கு ஒரு சான்று மட்டுமல்ல. அவர் மீதான மக்களின் தளராத நம்பிக்கைக்கான உலகளாவிய அங்கீகாரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடி உலகின் நம்பர் 1 தலைவர்: அமித்ஷா புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: