அப்போது, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி, தமிழக அரசு தரப்பில், சென்னை நகரில் ஆம்னி பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படும் வழித்தடங்களின் இரு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோயம்பேட்டை சுற்றி உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை (கேரேஜ்கள்) ஆம்னி பஸ்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், பயணிகளை ஏற்றி இறக்குவது போரூர் மற்றும் சூரப்பேடு டோல் பிளாசா நிறுத்தங்களில் மட்டுமே. தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்படக் கூடாது என்று தனது இடைக்கால உத்தரவில் கூறியுள்ளார். மேலும், மறு உத்தரவு வரும் வரை புக்கிங் ஆப்களில் எவ்வித மாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
The post கோயம்பேடு பணிமனைகளில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கலாம்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.